islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

சனி, 19 பிப்ரவரி, 2011

பிராணிகளை நேசிப்போம்






அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஓர் அன்
ஸாரியின் தோட்டத்தில் நுழைந்தார்கள். அங்கு ஓர் ஒட்டகம் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த ஒட்டகம் அண்ணலாரைப் பார்த்தவுடன் வேதனை நிரம்பிய குரலில் கனைத்தது. இரு கண்களிலிருந்தும் கண்ணீர் வடியலாயிற்று. அண்ணலார் அதனருகில் சென்று பரிவுடன் அதன் தலையிலும் நெற்றியிலும் திமிளிலும் தம் கரங்களால் தடவினார்கள். உடனே, அது அமைதியுற்றது. அண்ணலார்
வினவினார்கள்: ""இந்த ஒட்டகத்தின் எஜமான் யார்? இந்த ஒட்டகம் யாருடையது?'' ஓர் அன்ஸாரி இளைஞர் வந்து, ""அல்லாஹ்வின் தூதரே! இந்த ஒட்டகம் என்னுடையது'' என்று கூறினார். அண்ணலார் கூறினார்கள்:
""உம் அதிகாரத்தில் ஒப்படைத்திருக்கும் இந்த வாயில்லாப் பிராணியைக் குறித்து நீர் அல்லாஹ்வுக்கு அஞ்சவில்லையா? இந்த ஒட்டகம் தன் கண்ணீர் மற்றும் வேதனைக் குரலின் வாயிலாக என்னிடம்- நீர் அதனைப் பசியோடு வைத்திருந்து தொடர்ந்து வேலை வாங்குவதாக முறையிட்டுக் கொண்டிருந்தது'' எனக் கூறினார்கள். (ரியாலுஸ் ஸாலிஹீன்)அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால் ஒட்டகங்களுக்கு அவற்றின் உணவுப் பங்கை பூமியிலிருந்து கொடுங்கள். பஞ்சகாலத்தில் நீங்கள் பயணம் செய்வீர்களாயின் அவற்றை வேகமாக ஓட்டிச் செல்லுங்கள்.''(முஸ்லிம்)
விளக்கம்: பயிர்ப்பச்சைகள் பெருகிச் செழிக்கும் காலமாக இருக்கும்போது பூமியில் நாலா திசைகளிலும் புற்பூண்டுகள் முளைத்திருக்கும்போது பயணத்தில் ஒட்டகங்களுக்கு மேய்வதற்குச் சந்தர்ப்பம் கொடுங்கள். ஆனால், பஞ்சகாலமாக இருக்கும்போது வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்லுங்கள். ஏனெனில், சீக்கிரம் தங்குமிடம் போய்ச் சேர்ந்திட வேண்டும். மேலும், வழியில் பசி, தாகத்தின் தொல்லையில் இருந்து அப்பிராணிகள் தப்பித்திட வேண்டும்.
அறிவிப்பாளர்:ஷத்தாத் பின் அவ்ஸ்(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""ஒவ்வொரு செயலையும் நல்ல முறையில் சீர்படச் செய்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். எனவே, நீங்கள் எந்தப் பிராணியையாவது கொன்றால் அதனை முறையாகவும், வகையோடும் கொல்லுங்கள். எதனையாவது நீங்கள் அறுப்பீர்களாயின் அதனை நல்ல முறையில் அறுங்கள்.
உங்களில் ஒவ்வொருவரும்(ஒரு பிராணியை அறுக்கும்போது) தன் கத்தி முனையைக் கூராக்கிக் கொள்ளட்டும். அறுக்கப்படவிருக்கும் பிராணிக்கு நிம்மதியளிக்கட்டும்!(வெகுநேரம் துடிக்கவிடக்கூடாது. அதன் உயிர் சீக்கிரம் பிரியும் வண்ணம் அறுக்க வேண்டும்)
(முஸ்லிம்)
(அண்ணல் நபிகளார் வாழ்வினிலே...நூலில் இருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக