islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

india

ஐ.ஐ.சி தரவரிசைபட்டியலில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்

india flag
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இலங்கை மூன்றாம் இடத்திலும்  உள்ளது.ஆஸ்திரேலியா காலிறுதியிலேயே உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய போதும் 128 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இறுதி ஆட்டத்தில் தோற்ற இலங்கை அணி 118 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 116 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் அணிகள் முறையே 6, 7, 8, 9-வது இடங்களில் உள்ளன.
துடுப்பாட்ட தரவரிசையில்…
தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா, டிவில்லியர்ஸ், இலங்கையின் தில்ஷான், சங்ககரா, இங்கிலாந்தின் ஜொனாதன் டிராட் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
இந்திய வீரர் கோலி 6-வது இடத்திலும், கேப்டன் மகேந்திர சிங் தோனி 8-வது இடத்திலும், சச்சின் 9-வது இடத்திலும், கம்பீர் 10-வது இடத்திலும், யுவராஜ் 17-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசபட்டியலில்…
நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி முதலிடத்திலும், ஜிம்பாப்வே வீரர் பிரைஸ் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் ஸ்வான் 3-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் 4-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் ஹர்பஜன் சிங் 18-வது இடத்தில் உள்ளார்.
சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில்…
வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி 3-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் யுவராஜ் 4-வது இடத்தில் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக