ஜனவரி 15,2011,01:02 IST
பெண்களுக்கு முறையான கல்வி அளித்தால், அவர்கள் ஆண்களையும் மிஞ்சுவார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.ஒருமுறை கலீபா உமர் (ரலி) அவர்கள், மஹர் உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வர நினைத்து தாக்கல் செய்தார்கள். 400 திர்ஹத்தை விட கூடுதலாக மஹர் தரக்கூடாது என்பது சட்டமாக இருந்தது. அந்த சட்டத்தைத் தாக்கல் செய்து மிம்பரில் இருந்து அவர் இறங்கியவுடன், ஒரு பெண்மணியின் குரல் கம்பீரமாக சிம்மம் போல் ஒலித்தது.அந்த அம்மையார் குறைஷி குலத்து பெண்மணி ஆவார். ""அமீருல் முஹ்மினீன் அவர்களே! நீங்கள் திருமறையின் (குர்ஆன்) அருள் வசனம் கேட்டதில்லையா?'' என்றார்.""என்ன வசனம்?'' என உமர்(ரலி) அவர்கள் திருப்பிக்கேட்க, ""நீங்கள் அவர்களுக்கு பொற்குவியலையே (மஹராக) கொடுத்திருந்தாலும் (அல்குர்ஆன் 4:20) என்று இறங்கிய வசனம்,'' என்ற அம்மையார்,""ஒரு பொற்குவியலையே மஹராகத் தரலாம் என்று திருமறை பெண்ணுரிமை பேசுகின்ற பொழுது, நீங்கள் எப்படி உச்சவரம்பு நிர்ணயிக்கலாம்?'' என்று குறுக்கு கேள்வி கேட்டார். உடனே கலீபா உமர்(ரலி) அவர்கள், மீண்டும் மிம்பரில் ஏறி, மசோதாவில் தான் தெரிவித்திருந்த யோசனையை உடனடியாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்கள். அது மட்டுமல்ல, எல்லாரும் தன்னை விட மார்க்க ஞானம் உள்ளவர்கள் என்றும் ஒப்புக்கொண்டார்கள். இன்னொரு அறிவிப்பில், ""இந்தப் பெண் சரியாகச் சொன்னார். ஆண்
தவறிழைத்து விட்டான்,'' என்றார்கள். பெண்களுக்கு முறையான கல்வியை அளித்தால், ஆண்களை மிஞ்சுமளவிற்கும், அவர்களைத் தட்டிக்கேட்கும் அளவிற்கும், அவர்களை திருத்தும் அளவிற்கும் தகுதி பெற்றவர்களாகப் பெண்கள் திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.,,,,,,,,,,,சாகுல் ஹமிது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக