இஸ்லாம்
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது (இதற்குப் பிறகு அண்ணலார் உலகைவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்) தம் உம்மத்தினரை- இறைநம்பிக்கை கொண்ட லட்சியக் குழுவினரை நோக்கி உரையாற்றிய வண்ணம் கூறினார்கள்.""கேளுங்கள்! உங்களுடைய இந்த நாளும் இந்த மாதமும் இந்த நரகமும் எவ்வாறு கண்ணியத்திற்குரியனவாய்த் திகழ்கின்றனவோ, அவ்வாறே அல்லாஹ் உங்கள் ரத்தத்தையும், செல்வத்தையும், மானத்தையும், கண்ணியத்திற்குரியனவாய் ஆக்கி வைத்துள்ளான். கேளுங்கள்! நான் உங்களிடம் (இறைவனின் தூதை) சேர்ப்பித்து விட்டேனா?'' மக்கள், ""ஆம்! நீங்கள் சேர்ப்பித்துவிட்டீர்கள்!'' என்று பதிலளித்தனர். ""இறைவா! நான் என் சமுதாயத்தினர்க்கு உன் தூதை சேர்ப்பித்துவிட்டேன் என்பதற்கு நீயே சாட்சியாக இரு!'' என்று அண்ணலார் கூறினார்கள். அண்ணலார் இந்தச் சொற்களை மும்முறை நவின்றார்கள். பிறகு, மேலும் கூறினார்கள்: ""கேளுங்கள்! எனக்குப் பிறகு, நீங்கள் முஸ்லிம்களாய் இருந்து கொண்டே ஒருவரோடொருவர் போரிடும் வகையில் நிராகரிப்பாளர்களாகி விடாதீர்கள்.''
அறிவிப்பாளர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:""தமக்கிடையே இரக்கம் காட்டுவதிலும், அன்பு செலுத்துவதிலும், ஒருவரையொருவர் சார்ந்து நிற்பதிலும் ஓர் உடலைப் போல முஸ்லிம்களை நீ காண்பாய்! ஓர் உறுப்புக்கு நோய் ஏதும் வந்துவிட்டால் உடலின் மற்ற உறுப்புக்களும் உறங்காமல் காய்ச்சலால்(வாடி அதன் துன்பத்தில் பங்கு கொண்டு) துணை நிற்கின்றன.'' (புகாரி)
விளக்கம்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உடலை உதாரணமாகத் தந்து, முஸ்லிம்கள் உடலின் உறுப்புகளைப் போல இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, ""நீ அவர்கள் எப்போது கண்டாலும் ஒருவரோடொருவர் பரிவோடும் கருணையோடும் நடந்து கொள்பவர்களாய்த் தான் காண்பாய்,'' என்று முஸ்லிம்களின் ஒரு நிரந்தரப்பண்பு எனும் வகையில் தான் உடல் உறுப்புக்களை உதாரணமாக எடுத்துரைத்துள்ளார்கள்.
பரிவுடன் நடந்து கொள்வோம் இஸ்லாம் - கட்டுரை
ஜூலை 03,2010,01:50 IST
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது (இதற்குப் பிறகு அண்ணலார் உலகைவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்) தம் உம்மத்தினரை- இறைநம்பிக்கை கொண்ட லட்சியக் குழுவினரை நோக்கி உரையாற்றிய வண்ணம் கூறினார்கள்.""கேளுங்கள்! உங்களுடைய இந்த நாளும் இந்த மாதமும் இந்த நரகமும் எவ்வாறு கண்ணியத்திற்குரியனவாய்த் திகழ்கின்றனவோ, அவ்வாறே அல்லாஹ் உங்கள் ரத்தத்தையும், செல்வத்தையும், மானத்தையும், கண்ணியத்திற்குரியனவாய் ஆக்கி வைத்துள்ளான். கேளுங்கள்! நான் உங்களிடம் (இறைவனின் தூதை) சேர்ப்பித்து விட்டேனா?'' மக்கள், ""ஆம்! நீங்கள் சேர்ப்பித்துவிட்டீர்கள்!'' என்று பதிலளித்தனர். ""இறைவா! நான் என் சமுதாயத்தினர்க்கு உன் தூதை சேர்ப்பித்துவிட்டேன் என்பதற்கு நீயே சாட்சியாக இரு!'' என்று அண்ணலார் கூறினார்கள். அண்ணலார் இந்தச் சொற்களை மும்முறை நவின்றார்கள். பிறகு, மேலும் கூறினார்கள்: ""கேளுங்கள்! எனக்குப் பிறகு, நீங்கள் முஸ்லிம்களாய் இருந்து கொண்டே ஒருவரோடொருவர் போரிடும் வகையில் நிராகரிப்பாளர்களாகி விடாதீர்கள்.''
அறிவிப்பாளர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:""தமக்கிடையே இரக்கம் காட்டுவதிலும், அன்பு செலுத்துவதிலும், ஒருவரையொருவர் சார்ந்து நிற்பதிலும் ஓர் உடலைப் போல முஸ்லிம்களை நீ காண்பாய்! ஓர் உறுப்புக்கு நோய் ஏதும் வந்துவிட்டால் உடலின் மற்ற உறுப்புக்களும் உறங்காமல் காய்ச்சலால்(வாடி அதன் துன்பத்தில் பங்கு கொண்டு) துணை நிற்கின்றன.'' (புகாரி)
விளக்கம்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உடலை உதாரணமாகத் தந்து, முஸ்லிம்கள் உடலின் உறுப்புகளைப் போல இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, ""நீ அவர்கள் எப்போது கண்டாலும் ஒருவரோடொருவர் பரிவோடும் கருணையோடும் நடந்து கொள்பவர்களாய்த் தான் காண்பாய்,'' என்று முஸ்லிம்களின் ஒரு நிரந்தரப்பண்பு எனும் வகையில் தான் உடல் உறுப்புக்களை உதாரணமாக எடுத்துரைத்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக