திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தளபதி மு க ஸ்டாலின் அவர்களுக்கு பின் வரும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளேன்
திமுகவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவின் பேச்சாளர், இளைஞரணித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மாநகர மேயர், பொருளாளர், துணை முதல்வர், செயல் தலைவர் எனப் படிப்படியாக வளர்ந்து உங்களது கடின உழைப்பின் மூலம் திமுகவின் தலைவர் என்ற உயர்ந்த பொறுப்பை அடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் நீங்கள் ஆற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உரையும், தேர்வான பிறகு பெரியார் திடலுக்குச் சென்று மரியாதை செலுத்தியதும் திமுகவினரிடையே மட்டுமின்றி, தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் ஒற்றை மதம், ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மொழி என்ற கொள்கையை திணித்து நாட்டில் நிலவி வந்த அமைதியை சீர்குலைத்து வரும் பாசிச சக்திகளுக்கு பெரும் சவாலாக உங்கள் தலைமையில் திமுக வெற்றிகரமாக செயலாற்றும் என்ற பெரும் நம்பிக்கையை உங்கள் தலைமை அளித்துள்ளது.
திராவிட இயக்கக் கோட்பாடுகளை மிகுந்த வீச்சோடு முன்னெடுத்து சமூக நீதியையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமய நல்லிணக்கத்தையும் பேணிக்காத்தும் உங்கள் சீரிய தலைமையில் திமுக வெற்றிகளை குவிக்க மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக