islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

புதன், 29 ஆகஸ்ட், 2018

சுகாதாரமற்ற கழிவறை இங்கே!... சுத்தமான இந்தியா எங்கே?!...
இராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகராம் இராமநாதபுரம் புதிய பேருந்துநிலையம் இந்திய அளவில் அனைத்து ஊர்களில் இருந்தும் பயணிகள் வந்தோபோகும் இடம் ( இராமேசுவரம் செல்ல இங்குதான் பேருந்து). பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டியது நகராட்சியின் கடமை.
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் யாரும் பயண்படுத்த கூடிய நிலையில் இல்லை, எங்கும் சிறுநீர் மலம் தேங்கி கிடக்கின்றது. கழிவறை பராமரிப்பு இன்றி உடைந்து காணப்படுகின்றது. தண்ணீர் வசதியும் இல்லை, கழிவறையின் வெளிப்பகுதியில் மட்டும் குளோரின் தூவுவதால் சுகாதாரம் கிடைத்துவிடாது.
பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள நகராட்சி சுகாதார ஆய்வாளர் அறை எப்போதும் அடைத்தேவைக்கபட்டுள்ளது. இல்லாத சுகாதாரத்திற்க்கு ஆய்வாளர் எதற்கு?!..
கழிவறையை புகைப்படம் எடுத்தவுடன் எங்கிருந்தோ வந்த ஒருவர் வேகமாக கழிவறையையும் பூட்டிவிட்டு ஓடிவிட்டார்!..
எதற்காக வேகமாக கழிவறையை பூட்டவேண்டும்? !..
தூய்மைபடுத்தாத கழிவறையால் ஏற்படும் சுகாதார கேடுக்கு பொறுப்பு யார்?!..
ஒரு நாளைக்கு எத்தனை முறை கழிவறை தூய்மைபடுத்துகின்றனர்?!.
இந்த கழிவறையை பராமரிக்க ஆகும் செலவு என்ன?!..
அதற்கான பராமரிப்பு தொகை யாரிடம் ஒப்புவிக்கப்படுகின்றது?!..
மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஏன் இதனை மேற்பார்வையிடுவதில்லை?!..
மாவட்டத்தில் ஆங்காங்கு வைரல் காய்ச்சல் பரவி வரும் சூழலில் , இதுபோன்ற சுகாதாரமற்ற கழிவறைகள் மூலம் மேலும் பல தொற்றுவியாதிகள் மக்களுக்கு பரவ வாய்ப்புள்ளது!.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதனை நேரடியாக ஆய்வு செய்து, பயணிகளுக்கு சுகாதாரத்துடன் கூடிய கழிவறை வசதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுகொள்கின்றேன்!..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக