islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

புதன், 6 ஜூலை, 2011

சமீபத்தில் பாலா என்ற இயக்குனன் மரியாதை இல்லா தலைப்பில் “அவன் இவன்” என்று ஒரு திரைப்படத்தை வெளியிட்டுள்ளான்!. அதில் வழக்கம் போல, சினிமா கூட்டம் முஸ்லிம்களை சீண்டிப்பார்ப்பது போல, தானும் தன் பங்கிற்கும் இதில் சீண்டி பார்த்துள்ளான். இதில் வரும் ஒரு காட்சியில், வியாபாரிகள் அடிமாட்டை வாங்கி, விற்பனை செய்ய அடைத்து வைத்திருக்கின்றார். இவ்வாற...ு மாடுகள் கறிக்காகவும், வியாபாரத் திற்காகவும் வாங்கி விற்பனை செய்வதை கண்டு, மிருகங்களின் மேல் அக்கறை கொண்ட, படத்தில் தன் மர்மஸ்தானத்தை அம்மணமாக திரையில் காண்பிக்கும் சமஸ்தான ஜமீன்(!) ஹைனஸ், பொங்கி எழுந்து புளூ கிராசிற்கு தகவல் தெரிவிக்கின்றார்.



இதனால் ஆத்திரமடையும் அந்த வியாபாரி,

ஏண்டா!, மாட்ட வெட்டி திங்கிறதுக்கே இந்த உருகு உருகிறே!, எங்கோ இருக்கிற ஒட்டகத்தை அவனுவ இங்க கொண்டாந்து வெட்டி திங்கிராங்கல்ல!. அது பேரென்னடா!. குருதானியா?. என்று அருகில் உள்ளவனிடம் கேட்கின்றான்.

அதற்கு அவன், குர்பானி அண்ணே!. என்று அவனுக்கு சொல்லி கொடுக்கின்றான்.

பின் அவனை போய் கேளு!, அவனைபோய் கேளு!! என்று கத்துகின்றான்.

முஸ்லிம்கள், ஹஜ்ஜுப்பெருநாள் அன்று கொடுக்கும், மார்க்க கடமையான குர்பானியை வம்பிற்கு இழுக்கும் காட்சியை வேண்டும் என்றே வைத்துள்ளான். அதுமட்டுமில்லாமல், இக்காட்சியை காணும் மக்கள் முஸ்லிம்களின் மேல் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமாய் இந்த காட்சியை அமைத்துள்ளான்!.

சரி…..!. அவன் பங்கிற்கு நம்மை வம்பிற்கு இழுத்து விட்டதினால், இனி நாமும் இவனை நம் விருப்பப்படி தோழுரிப்போம்!. மிருகங்களை அறுப்பது கூடாது என்றால், அதே படத்தில் இந்த ஜமீன், வெள்ளைக்காரனோடு காட்டுக்குள் துப்பாக்கி சகிதம் வேட்டையாட செல்லும் காட்சியை ஏன் நீ வைத்தாய்?. மிருகவேட்டை என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் அல்லவா?. மிருகவேட்டை உனக்கு மிருகவதையாக தெரியவில்லையா?. அவ்வாறு வேட்டைக்கு செல்பவர்களை தடுக்கும் வன அதிகாரியை அடித்து உதைக்கும் காட்சியையும் வைத்து கேவலப்படுதியது ஏன்?.

பின் வேறொரு காட்சியில், மிருகவதைக்கான புளுகிராஸ்ஸை துணைக்கு அழைக்கும் இந்த ஜமீன், அருவிக்கரையில் அமர்ந்து, கோழியின் சப்பைக்கறியை (Leg piece) ருசித்து, ருசித்து உண்ணுவது போன்ற காட்சியை வைத்து, தனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை என்று, தனக்கு மிருகங்களின் மேல உள்ள இரட்டை நிலையை வெளிப்படுத்தியுள்ளான். மிருகத்தை வதை கூடாது எனும் இவன், இந்தப்படத்தின் இறுதியில் மாட்டு வியாபாரியை உயிரோடு வைத்து கொழுத்தும் காட்சி, எந்த வதையில் சேரும் என்று இந்த கூறுகெட்ட பாலா விளக்கம் தருவானா?.

தற்போதுள்ள மிருகவதை சட்டத்தின் படி, சினிமாவில் மிருகங்களை காட்ட வேண்டும் என்றால், அந்த மிருகத்திற்கு மருத்துவ சான்று வேண்டும். ஆனால் இதில் காட்டப்படும் அத்தனை மாட்டிற்கும் அவ்வாறு சான்று வாங்கப்பட்டதா?. இல்லை என்றால் உடனே இந்த பாலாவை மிருகவதை சட்டத்தின் படி கைது செய்து உள்ளே தள்ளவேண்டும்!.

அதுமட்டுமல்ல, படம் முழுவதும், போலிஸ் மற்றும் ஜட்ஜை கேவலப்படுத்தி இவர்களை கையாலாகாதவர்களை போல் காட்டி, தன் அறிப்பையும் தீர்த்துள்ளான். இந்தப்படத்தில் காவல்துறையை கேவலப்படுதியது போல வேறு எந்தப்படதிலும் இருக்குமா என்பது சந்தேகமே!. இவ்வாறு பல இடங்களில் அரசாங்க துறைகளை, அதிகாரிகளை கேவலப்படுத்திய இவனுக்கு, மத்திய-மாநில அரசுகள், “பல காட்சிகளில் எங்கே பாலாவை காணவில்லை என்று தேட வேண்டி இருந்தது!. திரைக்கதையில் அங்கங்கே சோர்வு இருப்பது சலிப்பு” என்று நக்கீரன் இதழ் இந்தப்படத்திற்கு விமர்சனம் எழுதி இருப்பதையும் கண்டுகொள்ளாமல், சிறந்த படத்திற்கான விருது வழங்கினாலும் வழங்கும் என்பது இன்னும் கேவலமான செயலாகும்!.

சினிமா என்பது ஒழுக்கங்கெட்டவர்களின் கூடாரம் என்பது நாம் எல்லாம் அறிந்ததே!. ஆனால் அதை எல்லாம் தாண்டும் விதமாக, இந்தப்படத்தில் பாலா என்பவன், ஆத்தாலையும்-மகனையும் பலபேர்களின் முன்னிலையில் குத்துப்பாட்டு ஆட வைத்து, தாயிற்கும் மகனிற்கும் உள்ள உறவை கேவலப்படுத்தியும் உள்ளான்!. அதுமட்டும் அல்ல!. அதே தாயை அவள் வரும் காட்சி முழுவதும், புகை பிடிப்பவளாகவும் காட்டி பெண் இனத்தையும் கேவலப்படுத்தி உள்ளான்!. மேலும் படம் ஆரம்பமானது முதல் இறுதிவரை ஒரே மது அருந்தும் காட்சிகள்!. புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் சினிமாவில் காட்டக்கூடாது என்ற ஆணையையும் மீறிய இந்த பாலாவை கைது செய்து உள்ளே தள்ளவேண்டும். ஏற்கனவே இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஜமீன் ஒருவர் கோர்ட்டை அணுகியுள்ளார்.

முஸ்லிம்களின் நம்பிக்கையை கேள்வி கேட்க யார் இந்த பாலா?. முஸ்லிம்களின் மார்க்க கடமையை இழிவுபடுத்தும் இக்காட்சியை, உடனே நீக்கவேண்டும்!. முதியவரை அம்மணமாக காட்டி பலான படம் எடுக்கும் பாலா முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!.
See more

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக